என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அய்யா குழந்தையாக மாறி விட்டார்... ராமதாஸ் கூறிதான் பா.ஜ.க.வுடன் கூட்டணி பேசினேன் - அன்புமணி
- தி.மு.க.விற்கு எதிராக பிரசாரம் செய்யுங்கள்.
- ஐயாவுடன் இருக்கும் 3 பேர் சுயலாபத்திற்கு சுயலாபத்திற்காக அவரை பயன்படுத்தி கொள்கின்றனர்.
பா.ஜ.க. கூட்டணிக்காக அன்புமணியும், சவுமியாவும் தன்னிடம் கெஞ்சியதாக ராமதாஸ் கூறியிருந்த நிலையில் பா.ம.க. சமூக ஊடகப்பிரிவு கூட்டத்தில் பேசிய அன்புமணி இதற்கு மறுப்பு தெரிவித்தார்.
பா.ம.க. சமூக ஊடகப்பிரிவு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:
* 2024 தேர்தலில் ராமதாஸ் கூறிதான் பா.ஜ.க.வுடன் கூட்டணி பேசினேன்.
* வி.சி.க.விற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏன்? இதெல்லாம் தி.மு.க.வின் சூழ்ச்சி.
* தி.மு.க. தான் பா.ம.க.வின் எதிரி, தி.மு.க.விற்கு எதிராக பிரசாரம் செய்யுங்கள்.
* தமிழக காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் தற்போது ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது.
* என்றாவது ஒருநாள் ராமதாசை வி.சி.க. தலைவர் திருமாவளவன் புகழ்ந்து பேசி உள்ளாரா? தற்போது ஏன் புகழ்ந்து பேசுகிறார்?
* வி.சி.க.வின் வன்னிஅரசு, ரவிக்குமார், சிந்தனைச்செல்வனுக்கு ராமதாஸ் மீது திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது.
* சி.வி.சண்முகம் தைலாபுரம் வருகை குறித்து நான் கேட்டபோது அவர் பத்திரிகை வைப்பதற்காக வந்தார் என ராமதாஸ் கூறினார்.
* ஐயாவுடன் இருக்கும் 3 பேர் சுயலாபத்திற்கு அவரை பயன்படுத்தி கொள்கின்றனர்.
* கடந்த 5 ஆண்டுகளாக அய்யா அய்யாவாக (ராமதாஸ்) இல்லை. வயது முதிர்வின் காரணமாக அவர் குழந்தையாக மாறி விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.






