என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராமதாசை சுற்றி தி.மு.க.வின் கைக்கூலிகள் - அன்புமணி குற்றச்சாட்டு
- பா.ம.க.வை களத்தில் நேரடியாக சந்திப்பதற்கான தைரியம் தி.மு.க.வுக்கு கிடையாது.
- தைலாபுரம் தோட்டத்தை தி.மு.க. கட்டுப்பாட்டில் எடுத்து விட்டது.
மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியதாவது:
* விரைவில் நாம் மிகப்பெரிய மெகா கூட்டணியை அமைக்க இருக்கிறோம்.
* மெகா கூட்டணி முன்பு தி.மு.க. படுதோல்வியை சந்திக்கப் போவது உறுதி.
* பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கும் தி.மு.க. தான் காரணம்.
* அய்யா ராமதாசை சுற்றி தீய சக்திகளும், தி.மு.க.வின் கைக்கூலிகளும் இருக்கிறார்கள்.
* பா.ம.க.வை களத்தில் நேரடியாக சந்திப்பதற்கான தைரியம் தி.மு.க.வுக்கு கிடையாது.
* பா.ம.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கிறது தி.மு.க.
* தி.மு.க.வினர் சூழ்ச்சி செய்து வன்னியர்களையும் பட்டியலின மக்களையும் ஒன்றுசேர விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.
* தைலாபுரம் தோட்டத்தை தி.மு.க. கட்டுப்பாட்டில் எடுத்து விட்டது.
* எவ்வளவோ அசிங்கங்களையும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டிருக்கிறேன்.
* துரோகிகளை ஒருபோதும் நான் மன்னிக்கப்போவது கிடையாது.
* ராமதாஸ் குழந்தை மாதிரி, அவருக்கு தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் தெரியாது. அவருக்கு 87 வயதாகி விட்டது.
* டெல்லியில் 30 பேர் போராட்டம் நடத்திவிட்டு 3,000 பேர் கலந்து கொண்டதாக ராமதாசிடம் பொய் சொல்லி இருக்கிறார்கள்.
* நான் நடத்தும் கூட்டங்களில் கூட்டம் குறைவாக இருப்பதாக ராமதாசிடம் தவறான தகவல்களை சொல்லி வருகிறார்கள்.
* இன்னும் 3 மாதத்தில் யார் யார் சிறைக்கு செல்ல போகிறார்கள் என பார்த்துக்கொண்டிருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






