என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    2026 ஆகஸ்ட் வரை அன்புமணியே தலைவர்- பா.ம.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்
    X

    2026 ஆகஸ்ட் வரை அன்புமணியே தலைவர்- பா.ம.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

    • பொதுச்செயலாளர், பொருளார் உள்ளிட்ட பதவி காலங்களும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • ஓராண்டு காலத்திற்கு பின்னரே உட்கட்சி தேர்தல் நடத்தப்படும்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ள நிலையில், பொதுக்குழு மேடையில் ராமதாசுக்காக இருக்கை ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இந்த பொதுக்குழுவில் பா.ம.க. கட்சி விதிகள் திருத்தப்பட்டு, பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணியின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரும் 2026 ஆகஸ்ட் வரை அன்புமணியே பா.ம.க. தலைவராக தொடர்வார் என்று தீர்மானம் நிறைவேற்றம். மேலும் பொதுச்செயலாளர், பொருளார் உள்ளிட்ட பதவி காலங்களும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு காலத்திற்கு பின்னரே உட்கட்சி தேர்தல் நடத்தப்படும். வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்காவிட்டால் தமிழக அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றம்.

    அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் கடந்த மே மாதம் முடிவடைந்ததாக ராமதாஸ் கூறிவந்த நிலையில், அன்புமணியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×