என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இந்தியா-அமெரிக்கா வரி விவகாரத்தில் உடனடி தீர்வு- துணை ஜனாதிபதியிடம் ஏ.இ.பி.சி., தலைவர் வலியுறுத்தல்
    X

    இந்தியா-அமெரிக்கா வரி விவகாரத்தில் உடனடி தீர்வு- துணை ஜனாதிபதியிடம் ஏ.இ.பி.சி., தலைவர் வலியுறுத்தல்

    • அமெரிக்க வர்த்தகர்கள் புதிய ஆர்டர்களை நிறுத்தவும், ரத்து செய்யவும் தொடங்கி உள்ளனர்.
    • இந்தியாவில் உள்ள ஏற்றுமதியாளர்கள் மாற்று சந்தைகளை உருவாக்குவது என்பது 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும்.

    திருப்பூரை சேர்ந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் சக்திவேல் புது டெல்லியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து இந்திய ஆயத்த ஆடை துறை எதிர்கொண்டு வரும் முக்கிய சவால்கள் குறித்தும் அமெரிக்காவில் சமீபத்திய இறக்குமதி வரி நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் மிகப்பெரிய ஆயத்த ஆடை ஏற்றுமதி சந்தையாக அமெரிக்காவிற்கு செல்லும் ஏற்றுமதிகளை பாதுகாக்க இந்தியா-அமெரிக்கா வரி விவகாரத்தில் உடனடியாக தீர்வு காண வேண்டிய தேவை உள்ளது.

    50 சத விகித அதிக வரி விதிப்பு காரணமாக வர்த்தகர்கள் ஆர்டர்கள் ரத்து செய்ய ப்படும் அபாயம் , உற்பத்தி குறைப்பு , வேலை வாய்ப்பு இழப்பு மற்றும் இந்தியாவின் சந்தைப்பங்கை நிரந்தரமாக இழக்கும் நிலை போன்ற கடுமையான சூழ்நிலைகள் உருவாகி வருகிறது.

    அமெரிக்க வாடிக்கை யாளர்களை தக்க வைத்து க்கொள்ள ஏற்றுமதி யாளர்கள் ஏற்கனவே 25 சதவீதம் விலை குறைப்பை ஏற்றுக்கொண்டு ள்ளதாகவும், இதன் காரணமாக நிறுவனங்களின் லாபம் முற்றிலும் இல்லாததுடன் சேமிப்புகளும் குறைந்து வருவதால் நீண்ட காலத்திற்கு இந்நிலையை தொடர முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

    தற்போது அமெரிக்க வர்த்தகர்கள் புதிய ஆர்டர்களை நிறுத்தவும், ரத்து செய்யவும் தொடங்கி உள்ளனர். அதற்கு ஈடாக இந்தியாவில் உள்ள ஏற்றுமதியாளர்கள் மாற்று சந்தைகளை உருவாக்குவது என்பது 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும். இச்சூழ்நிலையில் சலுகை வசதிகள் கொண்ட போட்டி நாடுகள் இந்தியாவின் இடத்தை நிரந்தரமாக பிடித்து விடும் அபாயம் உள்ளது.

    இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதியை பாதுகாக்க இந்தியா-அமெரிக்கா இறக்குமதி வரி சிக்கல் அல்லது வர்த்தக ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவு செய்ய வேண்டும். முடியாத பட்சத்தில் ஒப்பந்தம் முடியும் வரை இடைக்கால வரி தளர்வு அல்லது நிறுத்தம் வழங்க வேண்டும் என வலியுறுத்த ப்பட்டுள்ளது.

    மேலும் 3 முதல் 6 மாதங்கள் கூட தாமத மானால் இந்தியாவின் முக்கியமான ஆயத்த ஆடை ஏற்றுமதி துறை வளர்ச்சிக்கு திரும்ப முடியாத நிரந்தர இழப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×