என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையை கொடுக்க வைத்ததே அ.தி.மு.க. தான்- எடப்பாடி பழனிசாமி
- ஏழைகளுக்கான எந்த திட்டத்தையும் திமுக அரசு கொண்டு வரவில்லை.
- கமிஷன், கரப்ஷன் ஆகிய பணிகளை மட்டுமே திமுக சரியாக செய்கிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதயில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்கு திமுக அரசால் ஊதியம் வழங்க இயலவில்லை" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி அதிமுக.
ஏழைகளுக்கான எந்த திட்டத்தையும் திமுக அரசு கொண்டு வரவில்லை.
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையை கொடுக்க வைத்ததே அதிமுக தான்.
கமிஷன், கரப்ஷன் ஆகிய பணிகளை மட்டுமே திமுக சரியாக செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






