என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    2016-க்கு பின் தேர்தல் களம் அ.தி.மு.க.விற்கு போராட்டக்களம் ஆகிவிட்டது- செங்கோட்டையன்
    X

    2016-க்கு பின் தேர்தல் களம் அ.தி.மு.க.விற்கு போராட்டக்களம் ஆகிவிட்டது- செங்கோட்டையன்

    • யாராவது கட்சியை விட்டு சென்றால் அவர்களை நேரில் சென்று மீண்டும் அழைப்பார் எம்.ஜி.ஆர்.
    • ஆளுமை, மக்கள் செல்வாக்கு மிக்க தலைமை தேவை என்பதால் ஜெயலலிதாவை ஆதரித்தோம்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். இது முக்கியமான நேரம், அமைதி காக்குமாறு கூறி பேசத் தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கடந்த 1972-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் தான் அ.தி.மு.க.

    * கிளைக் கழக செயலாளராக எனது பணியை அ.தி.மு.க. வில் தொடங்கினேன்.

    * செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு வெளியே வந்து பொதுமக்கள், தொண்டர்களுடன் உரையாற்றுவேன்.

    * மக்கள் மனதில் குடிக்கொண்டிருக்கும் தலைவர் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

    * என்னை பொருளாளராக நியமித்து பொதுக்குழுவை நடத்த எம்.ஜி.ஆர்.சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    * சத்யா ஸ்டூடியோவுக்கு என்னை அழைத்து மனதார பாராட்டியவர் எம்.ஜி.ஆர்.

    * சத்தியமங்கலத்தில் என்னை போட்டியிடுமாறு கூறினார் எம்.ஜி.ஆர்.

    * என்னுடைய பெயரை சொன்னால் மட்டும் போதும் தேர்தலில் வெற்றி பெறலாம் என எம்.ஜி.ஆர். கூறினார்.

    * இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்ற பெயரை பெற்றவர் எம்.ஜி.ஆர்.

    * யாராவது கட்சியை விட்டு சென்றால் அவர்களை நேரில் சென்று மீண்டும் அழைப்பார் எம்.ஜி.ஆர்.

    * ஆளுமை, மக்கள் செல்வாக்கு மிக்க தலைமை தேவை என்பதால் ஜெயலலிதாவை ஆதரித்தோம்.

    * திராவிடர்கள், ஆன்மீகவாதிகள் ஏற்றுக்கொள்ளும் ததலைமை பண்பை பெற்றிருந்தார் ஜெயலலிதா.

    * ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுகவுக்கு சோதனை வந்த போது அனைவரும் சேர்ந்து சசிகலாவை அழைத்தோம்.

    * சசிகலாவுக்கு பின் எடப்பாடி பழனிசாமியை நியமித்தோம்.

    * எனக்கு 2 வாய்ப்புகள் இருந்தபோதும் இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்

    * அ.தி.மு.க.வுக்காக பல்வேறு தியாகங்களை செய்திருக்கிறேன்.

    * 2016-க்கு பின் தேர்தல் களம் போராட்டக்களம் ஆகி விட்டது என்பதை நாம் அறிவோம்.

    * 2019, 2021, 2024 உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்த போது களத்தில் பிரச்சனை ஏற்பட்டது என்றார்.

    முன்னதாக, கோபியில் செய்தியாளர் சந்திப்பை நடத்துவதற்கு முன்னர் செங்கோட்டையன் ரோடுஷோ நடத்தினார்.

    Next Story
    ×