என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நா.த.க.வில் இருந்து வெளியேறிய 3000 பேர் தி.மு.க.-வில் இணைய உள்ளதாக தகவல்
    X

    நா.த.க.வில் இருந்து வெளியேறிய 3000 பேர் தி.மு.க.-வில் இணைய உள்ளதாக தகவல்

    • 2021 சட்டசபை தேர்தல், 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நா.த.க. வேட்பாளர்களும் கட்சியில் இருந்து விலகினர்.
    • பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு காரணமாக ஏற்பட்ட அதிருப்தியால் நா.த.க.வில் மேலும் பலர் விலகி உள்ளனர்.

    சென்னை:

    சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். சீமான் தனது கொள்கைகளில் இருந்து விலகி முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதாக கட்சியில் இருந்து விலகியவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

    நாம் தமிழர் கட்சியில் இருந்து 3000 பேர் வெளியேறினர். 2021 சட்டசபை தேர்தல், 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நா.த.க. வேட்பாளர்களும் கட்சியில் இருந்து விலகினர்.

    பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு காரணமாக ஏற்பட்ட அதிருப்தியால் நா.த.க.வில் மேலும் பலர் விலகி உள்ளனர்.

    நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய 3000 பேர் நாளை தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×