search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டால் நிர்மலா சீதாராமன் ஆய்வுக்கு வருகிறார்: வைகோ
    X

    உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டால் நிர்மலா சீதாராமன் ஆய்வுக்கு வருகிறார்: வைகோ

    • தந்தை பெரியாரை இளைஞர்கள் அதிகளவில் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர்.
    • தமிழக தென்மாவட்டங்களில் மத்திய நிதியமைச்சர் ஆய்வு செய்யப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    மதுரை:

    பெரியாரின் 50-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மதுரை சின்ன சொக்கிக்குளம் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமூகநீதியின் வடிவமாக தந்தை பெரியார் திகழ்கிறார். தந்தை பெரியாரை இளைஞர்கள் அதிகளவில் பின்பற்ற ஆரம்பித்து விட்டனர். சமீப காலமாக தந்தை பெரியார் சிலை அவமதிப்பு அதிகளவில் நடைபெறுவது வேதனைக்குரியது.

    தந்தை பெரியார் சிலையை திட்டமிட்டு ஒரு கூட்டம் அவமதிப்பு செய்கிறது. அதற்கு தகுந்த பதிலடியை நாங்கள் கொடுத்துள்ளோம். வெளிப்படையாக பெரியார் சிலையை அவமதிப்பு செய்வோம் என கூறி விட்டு யாராவது ஒருவர் அவமதிப்பு செய்தால் அவர்கள் கை இருக்காது.

    தமிழக தென்மாவட்டங்களில் மத்திய நிதியமைச்சர் ஆய்வு செய்யப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய அமைச்சர்கள் தென்மாவட்ட வெள்ள பாதிப்பை பார்வையிடவில்லை என உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்ததை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்ய வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×