search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க.வின் கருவூலமாக செந்தில்பாலாஜி செயல்படுகிறார்- முன்னாள் அமைச்சர் விசுவநாதன் குற்றச்சாட்டு
    X

    தி.மு.க.வின் கருவூலமாக செந்தில்பாலாஜி செயல்படுகிறார்- முன்னாள் அமைச்சர் விசுவநாதன் குற்றச்சாட்டு

    • கனிமொழி கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை சென்று மு.க.ஸ்டாலின் பார்க்கவில்லை.
    • விரைவில் தமிழக மந்திரிகள் அனைவரும் குற்றவாளிகள் கூடாரத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள்.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் இரா.விசுவநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    தி.மு.க.வின் கருவூலமாக செந்தில்பாலாஜி செயல்பட்டு வருகிறார். அதனால்தான் அமலாக்கத்துறையினர் கைது செய்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர அவசரமாக பதட்டத்துடன் அவரை சென்று சந்தித்தார். உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின்படி அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ஆனால் ஒரு அமைச்சரை விசாரணையில் இருந்து காப்பாற்ற தி.மு.க அரசு முயல்வது வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்றாகும். அமலாக்கத்துறையினர் தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர்களை அம்மாநில அரசு பதவியில் இருந்து நீக்கிவிடும். ஆனால் தமிழக அரசு அதுபோல் செய்யவில்லை. கனிமொழி கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை சென்று மு.க.ஸ்டாலின் பார்க்கவில்லை. ஆனால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டபோது சென்று பார்த்து தனது கருத்துகளை பதிவு செய்திருப்பது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல.

    தற்போது 3-ம் தர பேச்சாளர் போல அவர் பேசி வருகிறார். ரூ.30ஆயிரம் கோடி ஊழல் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைதொடர்ந்து அவர் வேறு இலாகாவிற்கு மாற்றப்பட்டார். அதனைதொடர்ந்து பொன்முடியும் தற்போது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். விரைவில் தமிழக மந்திரிகள் அனைவரும் குற்றவாளிகள் கூடாரத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×