search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    துரை வைகோவிற்கு கவிதையில் வாழ்த்து தெரிவித்த வைரமுத்து
    X

    துரை வைகோவிற்கு கவிதையில் வாழ்த்து தெரிவித்த வைரமுத்து

    • திருச்சி தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார்.
    • துரை வைகோவிற்கு கவிஞர் வைரமுத்து கவிதையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க.வுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், துரை வைகோவிற்கு கவிஞர் வைரமுத்து கவிதையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நாடாளுமன்றத் தேர்தலுக்கு

    வாழ்த்துப்பெற வந்தார்

    திருச்சி வேட்பாளர்

    தம்பி துரை வையாபுரி

    தீயின் பொறி

    திராவிட நெறி

    தேர்தலே வெறி

    திருச்சியே குறி

    நிறைவெற்றி காண்பார்

    துரை வையாபுரி

    இவ்வாறு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×