search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உதயநிதி ஸ்டாலின் நாளை காஞ்சிபுரத்தில் பிரசாரம்
    X

    உதயநிதி ஸ்டாலின் நாளை காஞ்சிபுரத்தில் பிரசாரம்

    • உதயநிதி ஸ்டாலின் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம்.
    • விருதுநகர் காரியாபட்டியில் பிரசாரத்தை தொடங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    விருதுநகர் காரியாபட்டியில் பிரசாரத்தை தொடங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அருப்புக்கோட்டை, மதுரை திருமங்கலம், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய ஊர்களுக்கு சென்று தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    இன்று தேனி, திண்டுக்கல், மதுரையில் பிரசாரம் செய்கிறார். அதன்பிறகு விமானம் மூலம் இரவு சென்னை திரும்புகிறார்.

    நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் சென்று தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து காஞ்சிபுரம் சென்று தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து காஞ்சிபுரம் பெரியார் தூண் காந்தி சாலையில் திறந்த வேனில் பிரசாரம் செய்கிறார். அதன்பிறகு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதிக்குட்பட்ட செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய ஊர்களில் பேசுகிறார். இறுதியாக திருவண்ணாமலை கீழ் பெண்ணாத்தூர் பஸ் நிலையம் அருகே பேசுகிறார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தையொட்டி மாவட்டக்கழக செயலாளர்கள் பிரமாண்ட கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×