search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    25, 26-ந்தேதிகளில் மதுக்கடைகள் செயல்படாது
    X

    25, 26-ந்தேதிகளில் மதுக்கடைகள் செயல்படாது

    • ஓட்டல்களில் உள்ள மதுபார்களை கண்டிப்பாக மூட வேண்டும்.
    • மதுபானம் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள், கிளப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை கலெக்டர் ரஷ்மிசித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு நாள் வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை), குடியரசு தினம் 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இந்த 2 நாட்களில் தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள், கிளப்புகள், ஓட்டல்களில் உள்ள மதுபார்களை கண்டிப்பாக மூட வேண்டும். விதிமுறைகளை மீறி இந்த 2 நாட்களிலும் மதுபானம் விற்பனை செய்யும் சில்லரை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள், கிளப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×