என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நிதி சுமையால் ஜெயலலிதா என்னிடம் ரூ.2 கோடி கடனாக கேட்டார்
- சாதாரண தொண்டனாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், நகர் மன்ற தலைவர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சராக வந்திருக்க முடியுமா?
- அதிமுகவின் சரித்திரத்தில் 12 ஆண்டுகள் கழகத்தின் பொருளாளராக இருந்தவன் நான் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கோவை :
பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல் அடுத்த மாதம் 24-ந் தேதி வரை ஒரு மாதம் காலம் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி ஓ.பன்னீர்செல்வம் தனது சுற்றுப்பயணத்தை கொங்குமண்டலமான கோவை மாவட்டம் சூலூரில் தொடங்கினார்.
சூலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
உன்னைத்தான் தம்பி நான் நம்பியிருக்கிறேன் என்று எம்.ஜி.ஆரும் அம்மா அவர்களும் தாய்பாச உணர்வோடு ஒன்றரை கோடி தொண்டர்களையும் தான் பெற்ற பிள்ளைகள் என்று பாவித்து தான் வளர்த்தார்கள். இல்லையென்றால் சாதாரண தொண்டனாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், நகர் மன்ற தலைவர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சராக வந்திருக்க முடியுமா?
அதிமுகவின் சரித்திரத்தில் 12 ஆண்டுகள் கழகத்தின் பொருளாளராக இருந்தவன் நான் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த பொறுப்பை என்னிடம் அம்மா தரும்போது 2 கோடி ரூபாய் பற்றாக்குறை இருந்தது. இரண்டே வருடத்தில் அது 4 கோடியாக ஆயிற்று.
அம்மா அவர்கள் ஒருநாள் என்னை அழைத்து, பன்னீர்செல்வம் தனிப்பட்ட முறையில் எனக்கு நிதி பற்றாக்குறை இருக்கிறது. வழக்குகள் எல்லாம் என்மேல் போட்டு இருக்கார்கள். நான் அவர்களுக்கு எல்லாம் வங்கிகள் மூலம் பணம் தரவேண்டும். 2கோடி ரூபாய் கழக நிதி எனக்கு தர கேட்டார். உடனே நான் ஒரு வருடத்தில் திருப்பி தந்துவிடுகிறேன் என்றார்.
உடனே 2 கோடி ரூபாய் கொடுத்தேன். ஒரே மாதத்தில் அம்மாவும் அந்த 2 கோடி ரூபாய் கொடுத்தார். இதுதான் வரலாறு.
இன்றைக்கு எங்களை எல்லாம் வெளியேற்றி விட்டு வன்முறை மூலமாக 228 பேரை கூட்டி பொதுக்குழுவை கூட்டியிருக்கிறார்கள். இந்த 228 பேரை வைத்து கழகத்தை அபகரிப்பு செய்து மீண்டும் நாலரை வருடம் முதலமைச்சராக இருந்த ருசி அவரை விடவில்லை. திரும்ப வந்து நாட்டையே சூறையாடி கொள்ளையடித்து செல்ல வேண்டும் என்பது தான் அந்த கூட்டம் இன்றைக்கும் பொதுக்குழுவை நடத்திக் கொண்டு இருக்கிறது என்பதுதான் நிதர்சமான உண்மை என கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்