search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    40 தொகுதிக்கும் செல்வதற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பிரசார வேன்
    X

    40 தொகுதிக்கும் செல்வதற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பிரசார வேன்

    • 40 தொகுதிகளிலும் என்ன பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளது என்ற பட்டியல் சேகரித்து வருகின்றன.
    • பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் தொடங்கி விடும். அதற்கேற்ப பிரசார பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு தி.மு.க. திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

    இதற்கான பணியை கடந்த 6 மாதங்களுக்கு முன்பே தொகுதி வாரியாக தி.மு.க. தொடங்கி விட்டது.

    இந்த தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதற்கு பதிலாக முக்கிய ஊர்களில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். அதற்கேற்ப அவரது சுற்றுப் பயணங்கள் திட்டமிடப்பட்டு வருகிறது.

    ஆனால் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் சென்று வீதி வீதியாக பிரசாரம் செய்ய இருக்கிறார்.

    கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது எப்படி பிரசார வியூகம் அமைத்து ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்தாரோ அதே போன்று இந்த பாராளுமன்ற தேர்தலுக்கும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    இதற்காக 40 தொகுதிகளிலும் என்ன பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளது என்ற பட்டியல் சேகரித்து வருகின்றன.

    அதுமட்டுமின்றி நீட் தேர்வு விலக்கு, வெள்ள நிவாரண நிதி வராதது உள்ளிட்ட மத்திய அரசு மீதான பல்வேறு பிரச்சனைகளை பட்டியலிடுவது மட்டுமின்றி பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்தும் கடுமையாக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் தொடங்கி விடும். அதற்கேற்ப பிரசார பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் சென்று உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்ய இருப்பதால் அவருக்காக புதிய பிரசார வேன் கோவையில் தயாராகி வருகிறது.

    இன்னும் ஒரு வாரத்திற்குள் பிரசார வேன் தயாராகி விடும் என்றும் அந்த வேனில் வேட்பாளருடன் நின்று உதயநிதி பேசும் அளவுக்கு நடுவில் இடம் விசாலமாக அமைக்கப்பட்டு வருவதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×