search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்
    X

    பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

    • வட சென்னை மற்றும் தென் சென்னை மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது.
    • இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிட வேண்டும் என்ற லட்சியத்தோடு அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டோம்.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பாராளுமன்றத் தேர்தலுக்கான கழக மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டங்கள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில், வட சென்னை மற்றும் தென் சென்னை மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், மாவட்ட அமைச்சர் - மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - மாவட்ட - ஒன்றிய - பகுதி - நகர - பேரூர் கழக நிர்வாகிகள் - துணை மேயர் - மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினோம்.


    தொகுதியில் உள்ள கள நிலவரம் - நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது - தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் - பாக முகவர்களின் பணிகள் உள்ளிட்டவை குறித்து விரிவாகக் கேட்டறிந்தோம்.

    இந்தியாவை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பாக நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், நிரூபிக்கிற வகையில் வட சென்னை - தென் சென்னை தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிட வேண்டும் என்ற லட்சியத்தோடு அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×