என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மதுரவாயல்-தாம்பரம் பைபாஸ் சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மகன் கண்முன் தந்தை பலி
- கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பில் மோதியது.
- விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லி:
கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது64). இவரது மகன் பிரகாஷ். இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தவாசியில் நடந்த திருவிழாவில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்று இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை தந்தை-மகன் இருவரும் வந்தவாசியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.
கோவூர் அருகே தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பில் மோதியது.இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த செல்வராஜிம், அவரது மகன் பிரகாசும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே மகன் கண்முன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார்.
அவரது மகன் பிரகாஷ் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து பலியான செல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலியான செல்வராஜின் மகள் தீபா என்பவர் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர் விபத்து நடந்த இடத்திற்கு வந்து தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இந்த விபத்தால் தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்