search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரை ஜல்லிக்கட்டு அரங்கத்தை ஜன. 23 அல்லது 24ல் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    மதுரை ஜல்லிக்கட்டு அரங்கத்தை ஜன. 23 அல்லது 24ல் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 17ம் தேதி நடைபெற உள்ளது.
    • அலங்காநல்லூரின் கோட்டை முனி திடலில் உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பு முகூர்த்தக் கால் நடப்பட்டது.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 17ம் தேதி நடைபெற உள்ளது.


    ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக் கால் இன்று நடப்பட்டது. அலங்காநல்லூரின் கோட்டை முனி திடலில் உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பு முகூர்த்தக் கால் நடப்பட்டது.

    இந்நிகழ்வில் அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    இதன்பின் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் 66 ஏக்கரில் ரூ.44 கோடி செலவில் அமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு கலையரங்கம் 23 அல்லது 24-ந்தேதி திறக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதனை முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×