search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம் 26-ந்தேதி திறப்பு
    X

    மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம் 26-ந்தேதி திறப்பு

    • 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் இந்த நினைவிடம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.
    • கருணாநிதி நினைவிடத்தின் முகப்பில் 3 வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த நினைவிடத்தின் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது சாதனைகள், சிந்தனைகளை அடுத்த தலைமுறை அறியும் வகையில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் இந்த நினைவிடம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.

    கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்ததை நினைவு கூறும் விதமாக கருணாநிதி நினைவிடத்தின் முகப்பில் 3 வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளன.

    இதையடுத்து கருணாநிதி நினைவிடத்தை பொது மக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26- ந் தேதி திறந்து வைக்கிறார்.

    Next Story
    ×