என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
முரண்பாடுகளின் மொத்த வடிவம் இந்தியா கூட்டணி- ஜி.கே.வாசன்
- தேசப்பற்று உள்ள கட்சிகள் பா.ஜ.க. கூட்டணியில் இணையவேண்டும்.
- நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு தொடர மாநில கட்சிகள் சிந்தித்து செயல்பட வேண்டும்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக- தமிழ் மாநில காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜி.கே.வாசனுடன், பொன்.ராதா கிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை உறுதி செய்தார். முதல் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது. தொகுதி எண்ணிக்கை குறித்து பேசியுள்ளோம். தேசப்பற்று உள்ள கட்சிகள் பா.ஜ.க. கூட்டணியில் இணையவேண்டும். நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு தொடர மாநில கட்சிகள் சிந்தித்து செயல்பட வேண்டும். முரண்பாடுகளின் மொத்த வடிவம் இந்தியா கூட்டணி என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், தொகுதி பங்கீடு குறித்து ஜி.கே.வாசன் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். பா.ஜ.க, த.மா.கா இடையே சுமூகமாக பேச்சுவார்த்தை தொடர்கிறது. வரும் 4-ம் தேதிக்கு பிறகு 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்