என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நிறுத்தியது தான் தி.மு.க.வின் சாதனை- எடப்பாடி பழனிசாமி
    X

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நிறுத்தியது தான் தி.மு.க.வின் சாதனை- எடப்பாடி பழனிசாமி

    • அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நிறுத்தியது தான் தி.மு.க.வின் சாதனை.
    • தி.மு.க.விற்கு பாடம் புகட்டும் வகையில் இந்த தேர்தல் அமைய வேண்டும்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள திண்டமங்கலம் கிராமத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுடன் சேர்ந்து 108 பொங்கல் வைத்து கொண்டாடினார்.

    முன்னதாக அவர் ஓமலூரில் இருந்து மேட்டூர் செல்லும் சாலையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் விழா நடைபெறும் இடத்திற்கு மாட்டு வண்டி ஓட்டி வந்தார். தொடர்ந்து அவருக்கு வழி நெடுகிலும் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 108 பொங்கல் வைக்கும் இடத்திற்கு சென்று எடப்பாடி பழனிசாமி பொங்கல் பானையில் பச்சரிசியை போட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடினார்.

    அப்போது பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-


    ஏழைகளுக்காக திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றுகின்ற அரசு அ.தி.மு.க. தான். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நிறுத்தியது தான் தி.மு.க.வின் சாதனை.

    விவசாயிகளுக்காக தலைவாசலில் திறக்கப்பட்ட 1000 கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடை பூங்கா மூடிக்கிடப்பது வருத்தம் அளிக்கிறது. மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் செயல்படாமல் தி.மு.க. அரசு செயல்படுகிறது.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தல் முக்கிய தேர்தல். இந்த தேர்தல் தி.மு.க. அரசுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.

    தமிழகம், புதுச்சேரி சேர்த்து 40 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். தை பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடுவது போல தேர்தல் வெற்றியை நாம் கொண்டாடும் காலம் வந்து விட்டது.

    சேலம் அ.தி.மு.க.வின் கோட்டை. சேலத்தில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்ற ஒரே கட்சி அ.தி.மு.க. தான்.

    தமிழகத்திலேயே சேலம் பாராளுமன்ற தொகுதியில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். தி.மு.க.விற்கு பாடம் புகட்டும் வகையில் இந்த தேர்தல் அமைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×