என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஓ.பி.எஸ்.சின் திட்டத்தை முறியடிக்க வியூகம்- எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
- எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட தயார் என்று ஓ.பி.எஸ். அறிவித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- இரட்டை இலை சின்னத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஓ.பி.எஸ்.சின் செயல்பாடுகள் அமைந்தால் அதனை எதிர்கொள்வது எப்படி? என்பது பற்றியும் கூட்டத்தில் வியூகம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிக்க உள்ளார்.
கொங்கு மண்டலமான ஈரோடு கிழக்கு தொகுயில் கடந்த சட்டமன்ற தேர்வில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் களம் இறங்கிய த.மா.கா. வேட்பாளர் யுவராஜா சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்திருந்தார். எனவே இடைத்தேர்தலில் போட்டியிட்டு பலத்தை காட்ட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக ஓ.பன்னீர் செல்வம் களம் இறங்க உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட போவதாக அவர் அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் மூத்த நிர்வாகிகளான செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட தயார் என்று ஓ.பி.எஸ். அறிவித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் ஓ.பி.எஸ்.சின் செயல்பாடுகள் அமைந்தால் அதனை எதிர்கொள்வது எப்படி? என்பது பற்றியும் கூட்டத்தில் வியூகம் அமைக்கப்பட்டுள்ளது.






