search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பேரிடர் காலத்தில் யார் நல்லது செய்தாலும் தி.மு.க., வரவேற்கும்- ஆர்.எஸ்.பாரதி
    X

    பேரிடர் காலத்தில் யார் நல்லது செய்தாலும் தி.மு.க., வரவேற்கும்- ஆர்.எஸ்.பாரதி

    • கலைஞரின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைப்பது பெருமைக்குரியது.
    • தமிழக மக்களே தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பார்க் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாளான இன்று கலைஞரின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைப்பது பெருமைக்குரியது. பேராசிரியர் அன்பழகன் மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு செய்த சாதனைகளை தி.மு.க.வினர் மட்டுமல்லாது தமிழக மக்களே தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.


    கலைஞரின் ஆட்சியில் கட்டப்பட்ட ஓமந்தூரார் சட்டமன்றம் அ.தி.மு.க.வின் குறுகிய மனப்பான்மையினாலும் , பொறாமை எண்ணத்தாலும் மருத்துவ மனையாக மாற்றப்பட்டதை மக்கள் உணர்வார்கள். டெல்லியில் இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

    இதில் மிச்சாங் புயல் - தென் மாவட்ட மழை பாதிப்புகள் குறித்து முக்கிய கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் முன்வைப்பார். அவர்களும் நல்ல எண்ணத்துடன் நடந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

    பேரிடர் தொடர்பாக கவர்னர் ஆய்வுக்கூட்டம் குறித்து விமர்சிக்க விரும்பவில்லை. பேரிடர் காலம் என்பதால் நல்லதை யார் செய்தாலும் அதனை தி.மு.க., வரவேற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×