என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வரலாற்றில் இடம் பெற்றுவிட்டேன்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வரலாற்றில் இடம் பெற்றுவிட்டேன்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

    • சென்னையில் விரைவில் கலைஞர் நினைவகம் திறக்கப்பட உள்ளது.
    • திமுக அரசின் தீவிர முயற்சியால், நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி பெற்றோம்.

    கீழக்கரை:

    மதுரை மாவட்டம் அலங்கநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னதாக அரங்கத்தின் வாயிலில் அமைக்கப்பட்ட கருணாநிதி சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதன்பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * ஏறுதழுவுதல் அரங்கத்தை கட்டியவர் ஸ்டாலின் என்று வரலாற்றில் இடம்பெற்றுவிட்டேன்.

    * மதுரையில் கீழடி, கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம் அமைந்துள்ளது.

    * சிந்து சமவெளி நாகரிகத்தில் திமில் கொண்ட காளைகள் இருந்தன.

    * மதுரையை தூங்கா நகரம் என்பார்கள். போட்டி என்று வந்துவிட்டால் தோல்வியை தூள் தூளாக்கும் நகரம் என்பதை வாடிவாசல் ஆண்டுதோறும் நிரூபித்து வருகிறது.

    * தை மாதம் வந்தாலே அமைச்சர் மூர்த்தி, ஜல்லிக்கட்டு மூர்த்தியாக மாறிவிடுவார்.

    * சென்னையில் விரைவில் கலைஞர் நினைவகம் திறக்கப்பட உள்ளது.

    * திமுக அரசின் தீவிர முயற்சியால், நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி பெற்றோம்.

    * மத்திய அரசு மதுரையில் 2016-ல் அறிவித்து அடிக்கல் நாட்டிய பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதன்பின்னர் ஏறுதழுவுதல் அரங்கம் திறந்ததும் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500 மாடுகள் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

    Next Story
    ×