search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பிய வாலிபர்கள் மீது வழக்கு
    X

    மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பிய வாலிபர்கள் மீது வழக்கு

    • போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • தேர்தல் அலுவலர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் அளிக்க பாஜக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி பங்களாமேடு, புது பஸ்நிலையத்தில் நவீன மனிதர்கள் அமைப்பை சேர்ந்த வாலிபர்கள் ஆண்டவர், ஜெயராஜ், உதயசூரியன் உள்ளிட்ட சிலர் அனுமதியின்றி போதும் மோடி, பை பை மோடி என்று பதாகைகளுடன் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இன்ஸ்பெக்டர் உதயசூரியன் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பா.ஜ.க. நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் பிரதமர் மோடிக்கு எதிராக கோசம் எழுப்பிய வாலிபர்கள் அதற்கு முன்பே அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    பிரதமர் மோடிக்கு எதிராக கோஷமிட்ட வாலிபர்களை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தேர்தல் நடத்தும் அலுவலர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் அளிக்க பா.ஜ.க. நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×