search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடை இல்லை
    X

    அ.தி.மு.க. வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடை இல்லை

    • எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகார் அளித்தவர்களுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் இதே பதில் அளிக்கப்பட்டு உள்ளது.
    • ஜம்மு-காஷ்மீரில் ஒரு விவகாரத்தில் சின்னம் முடக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    இரட்டை இலை சின்னம் தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் வ.புகழேந்தி தாக்கல் செய்த மனுவை டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சச்சின் தத்தா அமர்வு கடந்த 14-ந் தேதி விசாரித்தது. அப்போது, மனுதாரர் புகழேந்தியிடம் புதிதாக ஒரு மனுவைப் பெற்று தேர்தல் ஆணைய சட்ட விதிமுறைகளின் படி அ.தி.மு.க. பிரிவுகள் குறித்து முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்தியது.

    தேர்தல் அறிவிப்பு வெளியாகி வேட்புமனு பெறும் கடைசி நாள் நெருங்குவதை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு புகழேந்தி வந்தார். அப்போது அவர் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் அந்தஸ்திலான அதிகாரியைச் சந்தித்து முறையிட்டார்.

    பின்னர் இது குறித்து புகழேந்தி கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீரில் ஒரு விவகாரத்தில் சின்னம் முடக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. விவகாரத்திலும் தகராறுக்குரிய கட்சி என்கிற கோப்பில் வைக்கப்பட்டுள்ளதால் அது போன்று முடி வெடுக்க வேண்டும். தற்போது முடிவெடுக்க அவகாசமில்லை என்பதால் சின்னத்தை முடக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தடையில்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்து உள்ளது. தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆவணங்களில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று தான் உள்ளது.

    எனவே அ.தி.மு.க. வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகார் அளித்தவர்களுக்கும் தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் இதே பதில் அளிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×