search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருநெல்வேலியில் சிம்லா முத்துசோழன் போட்டி: 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி
    X

    திருநெல்வேலியில் சிம்லா முத்துசோழன் போட்டி: 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

    • கள்ளக்குறிச்சி தொகுதியில் குமரகுரு போட்டி.
    • ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரேம்குமார் போட்டி.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., அகில இந்திய பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகள் தவிர மீதமுள்ள 32 பாராளுமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.

    நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று அ.தி.மு.க. வேட்பாளர்களின் 2-வது பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    ஸ்ரீபெரும்புதூர்- பிரேம்குமார்

    தருமபுரி - அசோகன்

    கள்ளக்குறிச்சி-குமரகுரு

    வேலூர் - பசுபதி

    திருவண்ணாமலை - கலியபெருமாள்

    கோவை- ராமச்சந்திரன்

    திருச்சி- கருப்பையா

    பெரம்பலூர்- சந்திரமோகன்

    பொள்ளாச்சி- கார்த்திகேயன்

    திருப்பூர் - அருணாசலம்

    நீலகிரி (தனி) - லோகேஷ்

    மயிலாடுதுறை - பாபு

    திருநெல்வேலி- சிம்லா முத்துசோழன்

    சிவகங்கை -சேவியர் தாஸ்

    தூத்துக்குடி- சிவசாமி வேலுமணி

    கன்னியாகுமரி- பசிலியா நசரேத்

    புதுச்சேரி- தமிழ்வேந்தன்

    விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தல் - ராணி

    Next Story
    ×