search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நிறைவு
    X

    பாராளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் நிறைவு

    • பிரசாரம் நிறைவடைந்த பின் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது
    • தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாகிறது.

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னையில் மு.க.ஸ்டாலினும், சேலத்தில் எடப்பாடி பழனிசாமியும், தர்மபுரியும் அன்புமணியும், கோவையில் அண்ணாமலையும் இன்றைய நாளில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    பிரசாரம் நிறைவடைந்த பின் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது. தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×