search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அனைவரும் ஜனநாயக கடமை ஆற்றிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
    X

    அனைவரும் ஜனநாயக கடமை ஆற்றிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

    • நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றி இருக்கிறேன்.
    • நீங்கள் நினைப்பது போல் இந்தியாவுக்கு வெற்றிதான்.

    சென்னை:

    இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல் இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி மகளிர் கல்லூரி வாக்குச்சாவடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வரிசையில் காத்திருந்து வாக்கை பதிவு செய்தார்.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

    நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றி இருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமை ஆற்றிட வேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல் ஜனநாயக கடமை ஆற்றிட வேண்டும் என்று உங்கள் மூலமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

    கே: வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

    நீங்கள் நினைப்பது போல் இந்தியாவுக்கு வெற்றிதான் என்று கூறினார்.

    Next Story
    ×