search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எய்ம்ஸ் விவகாரம்: குழந்தைத்தனமாக காரணங்களை கூறும் மத்திய அரசு: மா.சுப்பிரமணியன்
    X

    எய்ம்ஸ் விவகாரம்: குழந்தைத்தனமாக காரணங்களை கூறும் மத்திய அரசு: மா.சுப்பிரமணியன்

    • தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது.
    • நாகப்பட்டினத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது. 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 2 லட்சம் பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்குகின்றனர்.

    * நாகப்பட்டினத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    * எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய அரசு குழந்தைத்தனமாக காரணங்களை கூறுகிறது.

    * எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது தமிழக அரசு நில ஆர்ஜிதம் செய்யாத இடத்தில் எப்படி பிரதமரை அழைத்து அடிக்கல் நாட்டினார்.

    * மரங்கள் முழுமையாக அகற்றப்படாததால், எய்ம்ஸ் பணிகள் காலதாமதம் ஆனது எனக்கூறுவதெல்லாம் உண்மைக்கு புறம்பானது என்று அவர் கூறினார்.

    Next Story
    ×