என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    4 மாநில தேர்தல் முடிவு பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் பிரதிபலிப்பு: குஷ்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    4 மாநில தேர்தல் முடிவு பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் பிரதிபலிப்பு: குஷ்பு

    • நான்கு மாநிலங்களில் மூன்றில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.
    • தெலுங்கானாவில் 10 இடங்களில் முன்னணி வகிக்கிறது.

    பா.ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும், தேசிய மகளிர் அணி உறுப்பினருமான நடிகை குஷ்பு 4 மாநில தேர்தல் முடிவு குறித்து கூறியதாவது:-

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி அமைக்க இருக்கிறது. 4 மாநிலத் தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றி மக்கள் பிரதமர் மோடி மீது வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

    தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த 4 மாநிலத் தேர்தல் செமி பைனல் (அரையிறுதி) ஆட்டம் போன்றது என்று வர்ணித்தனர். தற்போது அவர்கள் அரையிதிலேயே தோல்வியடைந்து வெளியேறிவிட்டனர்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் இலக்கு 400 இடங்களில் வெற்றி பெறுவதாகும். அதை இந்த தேர்தல் உறுதி செய்துள்ளது. ராகுல் காந்தியை மக்கள் நிராகரித்துவிட்டனர்.

    இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.

    Next Story
    ×