search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் போட்டியிட காங்கிரசுக்கு ஒரு தொகுதி கேட்போம்: கே.எஸ்.அழகிரி
    X

    சென்னையில் போட்டியிட காங்கிரசுக்கு ஒரு தொகுதி கேட்போம்: கே.எஸ்.அழகிரி

    • கூட்டணியில் ஒரு தொகுதியில் ஒரு கட்சி தொடர்ந்து நின்றால், அந்த தொகுதியில் இன்னொரு கட்சிக்கு வாய்ப்பு கிடைக்காது.
    • சென்னை என்ன தி.மு.க.வுக்கு தான் கொடுக்க வேண்டுமா? என என்னிடமே பலர் கேட்டார்கள்.

    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில், மகாத்மா காந்தியின் 77-வது நினைவு தினம் மற்றும் தியாகிகள் தினத்தையொட்டி, மகாத்மா காந்தி மற்றும் தியாகிகளின் உருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூட்டணியில் ஒரு தொகுதியில் ஒரு கட்சி தொடர்ந்து நின்றால், அந்த தொகுதியில் இன்னொரு கட்சிக்கு வாய்ப்பு கிடைக்காது. உடனே அங்குள்ள அந்த கட்சி தொண்டர்கள் நாங்கள் என்ன இவர்களுக்கு வேலை செய்து கொண்டே இருப்பதுதான் நமது வேலையா? என்று கேட்பார்கள். இது தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். காங்கிரஸ் கட்சியிலும் இது போல கேட்பார்கள். சென்னையில் ஒரு தொகுதி வாங்கி கொடுத்தால் என்ன? சென்னை என்ன தி.மு.க.வுக்கு தான் கொடுக்க வேண்டுமா? என என்னிடமே பலர் கேட்டார்கள். உங்களுக்காக நான் கேட்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன். இது இயல்பு.

    இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

    Next Story
    ×