search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி போட்டி?: நிர்வாகிகள் கோரிக்கை
    X

    தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி போட்டி?: நிர்வாகிகள் கோரிக்கை

    • பாராளுமன்ற தேர்தலுக்காக தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
    • திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு 5வது நாளாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்காக தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் இன்று தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனையில் ஈடுபட்டது.

    ஆலோசனையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

    தொகுதியின் கள நிலவரம் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

    திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு 5வது நாளாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடியில் மீண்டும் திமுக வேட்பாளராக கனிமொழியை அறிவிக்க வேண்டுமென திமுக நிர்வாகிகள் ஒரு மனதாக கோரிக்கை விடுத்தனர்.

    கடந்த முறை பெற்ற வாக்குகளை விட இந்த முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் கனிமொழியை வெற்றி பெற வைக்க முழு முயற்சியில் உழைக்க வேண்டும் என்று திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றுள்ள ஐவர் குழுவினர் அறிவுறுத்தினர்.

    மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு உரிய நிவாரணம் பெற்று தருவதில் கவனம் செலுத்த நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினர்.

    Next Story
    ×