என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கொடைக்கானல் செல்ல உள்ளூர் மக்களும் இ பாஸ் பெற வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
    X

    கொடைக்கானல் செல்ல உள்ளூர் மக்களும் இ பாஸ் பெற வேண்டும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

    • போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
    • இ பாஸ் பெறும் நடைமுறையை அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு.

    கோடை காலம் என்பதால் ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதையொட்டி, சுற்றுலா தளங்களில் போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் இதர சிக்கல்கள் ஏற்படுவது வழக்கம்.

    இதை கருத்தில் கொண்டு கோடை மற்றும் விடுமுறை காலக்கட்டமான மே மாதத்தில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ் பெறும் நடைமுறையை அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    வெளியூர்களில் இருந்து ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோர் இ பாஸ் பெறும் நடைமுறை அமலில் உள்ளது. இந்த நிலையில், கொடைக்கானல் செல்லும் உள்ளூர் மக்களும் ஒருமுறை இ பாஸ் பெறுவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவிட்டுள்ளார்.

    ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோர் "epass.tnega.org" என்ற இணையதளத்தில் இபாஸ் பெறலாம். இ பாஸ் நடைமுறை மே 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×