search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவையில் இருந்து ஆன்மிக தலங்களுக்கு 10 புதிய ரெயில்கள் இயக்கப்படும்: அண்ணாமலை வாக்குறுதி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கோவையில் இருந்து ஆன்மிக தலங்களுக்கு 10 புதிய ரெயில்கள் இயக்கப்படும்: அண்ணாமலை வாக்குறுதி

    • பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
    • 250 மக்கள் மருந்தகம் ஒன்றரை ஆண்டுகளில் கொண்டு வரப்படும்.

    கோவை:

    கோவை பாஜக வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை இன்று கோவை மாவட்டத்திற்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

    * கோவை எப்போதும் பசுமையாக இருக்க மரங்கள் நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

    * கோவைக்கு 100 வாக்குறுதிகள்... 500 நாட்களில் நிறைவேற்றப்படும்.

    * சரவணம்பட்டியில் மக்களின் பொழுதுபோக்குக்காக பொதுப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * சரவணம்பட்டியில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின்கீழ் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * கோவையில் IIM கொண்டுவர வலியுறுத்துவோம்.

    * கோவையில் இருந்து ஆன்மிக தலங்களுக்கு 10 புதிய ரெயில்கள் இயக்கப்படும்.

    * 250 மக்கள் மருந்தகம் ஒன்றரை ஆண்டுகளில் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×