search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேகதாது விவகாரம்: வரும் 29-ம் தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    மேகதாது விவகாரம்: வரும் 29-ம் தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

    • மேகதாது விவகாரம் தொடர்பாக வரும் 29-ம் தேதி தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது:

    காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட 'பணி வரம்புக்கு' அப்பாற்பட்டு, 28-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பற்றி விவாதித்து, மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியதைக் கண்டித்தும், தமிழகத்தின் காவிரி நதிநீர் விஷயத்தில் துரோகம் இழைத்து வரும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், கர்நாடகம் 2023-24ம் ஆண்டிற்கு காவிரியில் தமிழகத்திற்கு தரவேண்டிய பங்குநீரை பெற்றுத் தராத தி.மு.க. அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 29-ம் தேதி தஞ்சாவூர், திலகர் திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் விவசாயத் தொழிலாளர்களும், பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×