என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாஜக-வுடன் கூட்டணி இல்லை: இறுதியாக உறுதியாக கூறிய எடப்பாடி பழனிசாமி
- பா.ஜனதாவுடன் அதிமுக கட்சி கூட்டணியில் இல்லை என ஏற்கனவே 25.06.2023-ல் தெரிவித்துவிட்டோம்.
- எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் பத்திரிகை, ஊடகங்களில் தவறான செய்திகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள்.
மாற்று கட்சியினர் அதிமுக-வில் இணையும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
* பா.ஜனதாவுடன் இவர்கள் (அதிமுக) மறைமுக உறவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் எனச் சொல்கிறார்கள்.
* பா.ஜனதாவுடன் அதிமுக கட்சி கூட்டணியில் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இல்லை என தீர்மானத்தின் மூலம் ஏற்கனவே 25.09.2023-ல் தலைமைக் கழகத்தில் இருந்து தெரிவித்துவிட்டோம்.
* ஆனால் அதன்பின் ஐந்து மாதங்களாக எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் பத்திரிகை, ஊடகங்களில் தவறான செய்திகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள்.
* உறுதியாக சொல்கிறோம்... இறுதியாக சொல்கிறோம். அதிமுக பா.ஜனதா கூட்டணியில் இல்லை. இல்லை.. இல்லை...
* பத்திரிகையாளர், ஊடகங்களை சேர்ந்தவர்கள் இனி எந்த இடத்திலும் இந்த கேள்வியை கேட்காதீர்கள்.
* சரியான நேரத்தில் கூட்டணியை அமைப்போம்.
* திமுக கூட்டணி பேச்சுவார்த்தை என்று சொன்னீர்கள். எங்கே முடிந்தது?. அந்த கூட்டணியில் இழுபறி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
* 10 நாட்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட இடங்களை மீண்டும் கொடுக்க மறுக்கின்ற கட்சிதான் திமுக.
* அந்த கூட்டணியில் எந்த கட்சிகள் இருக்கும், இல்லை என்பது 10 நாட்களில் தெரிந்து விடும்.
* திமுகவை பொறுத்தவரை கூட்டணியை நம்பி இருக்கிறது. மக்களை நம்பி இல்லை.
* அதிமுக-வை பொறுத்தவரை மக்களை நம்பிக் கொண்டிருக்கிறது. மக்கள்தான் எஜமானர்கள். மக்கள் முடிவுதான் இறுதியானது. மக்கள்தான் வாக்களிக்கிறார்கள். அவர்களைத்தான் நாங்கள் எஜமானர்களாக எண்ணுகின்றோம்.
* வாக்களித்த மக்கள் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும். அதற்காகத்தான் அதிமுக.






