search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    4 சதவீத அகவிலைப்படி உயர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
    X

    4 சதவீத அகவிலைப்படி உயர்வு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

    • 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 1.1.2024 முதல் 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
    • அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கத்தின் பல்வேறு சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 1.1.2024 முதல் 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    இந்த அகவிலைப்படி உயர்வால் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுகிறார்கள். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் தி.மு.க. அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

    அகவிலைப்படி உயர்வை அறிவித்ததையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கத்தின் பல்வேறு சங்க நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×