என் மலர்
செய்திகள்

அண்ணாமலை
ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் வழங்கக்கோரி 11 மாவட்டங்களில் பா.ஜனதா போராட்டம்- அண்ணாமலை
பா.ஜ.க. மட்டுமின்றி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் குறைக்கவில்லை என்று அண்ணாமலை கூறினார்.
தூத்துக்குடி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளசேத பாதிப்புகளை பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று பார்வையிட்டார்.
முன்னதாக அவர் விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மழை வெள்ள பாதிப்பு காரணமாக தமிழக அரசு விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டருக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணம் கொடுப்பதாக கூறி உள்ளது.
ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது நிவர் புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார்.
அந்த வகையில் இந்த தொகை மிகவும் குறைவு.
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது விவசாயிகளை நண்பர்களாக பார்த்த தி.மு.க. தற்போது இவ்வளவு குறைவான தொகையை அறிவித்து உள்ளது விவசாயிகளிடம் ஏமாற்றத்தை உருவாக்கி உள்ளது.
எனவே இந்த நிவாரண தொகையை கூடுதலாக வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போது எப்படி பார்க்கின்றார் என்று தெரியவில்லை.
தமிழக முதல்-அமைச்சர் மழை வெள்ள பாதிப்பு நிகழ்ச்சியினை ஒரு ‘டூரிஸ்ட் பேக்கேஜ்’ மாதிரி செய்கின்றனர்.
மழை வெள்ள பாதிப்பு பார்வையிட செல்லும் முதல்-அமைச்சர் விவசாய நிலங்களில் இறங்கி முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வாய்ப்பாக அமையும்.
ஸ்ரீரங்கம் கோவிலில் கருத்தியல் மண்டபத்தில் அமர்ந்து இன்னொருவர் சொற்பொழிவை கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பானது சம்பந்தமாக அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வது சரியல்ல. தைரியம் இருந்தால் என் மீது வழக்கு தொடரட்டும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாளை மறுநாள் (19-ந்தேதி) 11 மாவட்டங்களில் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம்.
தி.மு.க. பெட்ரோல் விலையை ரூ.5 குறைப்பதாக தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு ரூ.3 மட்டுமே குறைத்து உள்ளது. பா.ஜ.க. மட்டுமின்றி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் குறைக்கவில்லை. எனவே அதனை வலியுறுத்தி வருகிற 22-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளசேத பாதிப்புகளை பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று பார்வையிட்டார்.
முன்னதாக அவர் விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மழை வெள்ள பாதிப்பு காரணமாக தமிழக அரசு விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டருக்கு ரூ. 20 ஆயிரம் நிவாரணம் கொடுப்பதாக கூறி உள்ளது.
ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது நிவர் புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார்.
அந்த வகையில் இந்த தொகை மிகவும் குறைவு.
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது விவசாயிகளை நண்பர்களாக பார்த்த தி.மு.க. தற்போது இவ்வளவு குறைவான தொகையை அறிவித்து உள்ளது விவசாயிகளிடம் ஏமாற்றத்தை உருவாக்கி உள்ளது.
எனவே இந்த நிவாரண தொகையை கூடுதலாக வழங்க வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போது எப்படி பார்க்கின்றார் என்று தெரியவில்லை.
தமிழக முதல்-அமைச்சர் மழை வெள்ள பாதிப்பு நிகழ்ச்சியினை ஒரு ‘டூரிஸ்ட் பேக்கேஜ்’ மாதிரி செய்கின்றனர்.
மழை வெள்ள பாதிப்பு பார்வையிட செல்லும் முதல்-அமைச்சர் விவசாய நிலங்களில் இறங்கி முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அப்போது தான் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வாய்ப்பாக அமையும்.
ஸ்ரீரங்கம் கோவிலில் கருத்தியல் மண்டபத்தில் அமர்ந்து இன்னொருவர் சொற்பொழிவை கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பானது சம்பந்தமாக அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர்வது சரியல்ல. தைரியம் இருந்தால் என் மீது வழக்கு தொடரட்டும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாளை மறுநாள் (19-ந்தேதி) 11 மாவட்டங்களில் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம்.
தி.மு.க. பெட்ரோல் விலையை ரூ.5 குறைப்பதாக தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு ரூ.3 மட்டுமே குறைத்து உள்ளது. பா.ஜ.க. மட்டுமின்றி காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மட்டும் குறைக்கவில்லை. எனவே அதனை வலியுறுத்தி வருகிற 22-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...சபரிமலையில் தரிசனத்திற்கு 13 லட்சம் பேர் முன்பதிவு
Next Story