search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை கவர்னர் கிரண்பேடி
    X
    புதுவை கவர்னர் கிரண்பேடி

    புத்தாண்டு கொண்டாட்டம்- கவர்னர் கிரண்பேடி எதிர்ப்பு

    புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதற்கு கவர்னர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என முதலமைச்சர்    நாராயணசாமி  அறிவித்துள்ளார்.

    கடற்கரை பகுதியில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து புத்தாண்டை கொண்டாடலாம். அதற்கு எந்தவித தடையும் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதற்கு   கவர்னர் கிரண்பேடி   எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

    * புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதித்தால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    * தமிழகத்தில் இருந்து புத்தாண்டை கொண்டாட புதுச்சேரிக்கு வரும்போது கொரோனா அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×