என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூர் அருகே கோஷ்டி மோதலில் விவசாயி அடித்து கொலை
Byமாலை மலர்26 May 2020 7:57 AM GMT (Updated: 26 May 2020 7:57 AM GMT)
கடலூர் அருகே கோஷ்டி மோதலில் விவசாயி அடித்து கொலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மந்தாரக்குப்பம்:
கடலூர் மாவட்டம் திம்மராவுத்தன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 45). விவசாயி. இவரது மகள் வீட்டைவிட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த எம்.ஜி.ஆர். என்பவர் கேலி பேசினார். இதனால் அர்ஜூனனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் தகராறு ஏற்பட்டது. எம்.ஜி.ஆர்., அவரது மனைவி கவிதா, சகோதரர் செந்தில் குமார், தாயார் அலமேலு, உறவினர் ஜனார்த்தனன் ஆகியோர் அர்ஜூனன் தரப்பினரை தாக்கினர்.
இதில் காயம் அடைந்த எம்.ஜி.ஆர். மற்றும் அர்ஜூனன் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக அர்ஜூனன் புதுவை ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு அர்ஜூனன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுதொடர்பாக எம்.ஜி.ஆர்., செந்தில்குமார், ஜனார்த்தனன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X