search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    கடலூர் அருகே கோஷ்டி மோதலில் விவசாயி அடித்து கொலை

    கடலூர் அருகே கோஷ்டி மோதலில் விவசாயி அடித்து கொலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மந்தாரக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் திம்மராவுத்தன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 45). விவசாயி. இவரது மகள் வீட்டைவிட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டார்.

    இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த எம்.ஜி.ஆர். என்பவர் கேலி பேசினார். இதனால் அர்ஜூனனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் தகராறு ஏற்பட்டது. எம்.ஜி.ஆர்., அவரது மனைவி கவிதா, சகோதரர் செந்தில் குமார், தாயார் அலமேலு, உறவினர் ஜனார்த்தனன் ஆகியோர் அர்ஜூனன் தரப்பினரை தாக்கினர்.

    இதில் காயம் அடைந்த எம்.ஜி.ஆர். மற்றும் அர்ஜூனன் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக அர்ஜூனன் புதுவை ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு அர்ஜூனன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுதொடர்பாக எம்.ஜி.ஆர்., செந்தில்குமார், ஜனார்த்தனன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×