என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெண்ணை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த அதிமுக பிரமுகர்- போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
கடலூர்:
கடலூர் முதுநகர் சாலக்கரையை சேர்ந்தவர் அம்சவள்ளி (வயது 35). இவர் கடலூர் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் சரவணன் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். எனது உறவினரும், முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலருமான வினோத்ராஜ் என்பவர் என்னிடம் பேசி வந்தார். பின்னர் என்னிடம் ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தினார்.
கடலூரில் உள்ள ஒரு லாட்ஜிக்கு வரவழைத்து என்னை வற்புறுத்தி பலாத்காரம் செய்தார். அதனை செல்போனில் படம் பிடித்தார். பின்னர் நாளடைவில் செல்போனில் உள்ள படத்தை வைத்துகொண்டு சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார்
சிங்கப்பூரில் இருந்து எனது கணவர் அனுப்பிய பணம் மற்றும் பல நபர்களிடம் கடன் வாங்கி சுமார் 1 கோடி ரூபாயை என்னிடம் மிரட்டி வாங்கினார். அதோடு கடலூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு கொள்ள வற்புறுத்தினார்.
தனக்கு கவுன்சிலர் பதவி கிடைப்பதற்காக கடலூரில் உள்ள முக்கிய கட்சி பிரமுகருடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொள்ள மிரட்டி வருகிறார்.
இது சம்பந்தமாக எனது உறவினர்களிடமும் மற்றும் ஊர் பஞ்சாயத்தாரர்களிடமும் கூறினேன். ஆனால் வினோத்ராஜ் மதிக்கவில்லை. அ.தி.மு.க.வில் இருப்பதால் செல்வாக்கை பயன்படுத்தி கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் என் மீது பொய்யான புகார் கொடுத்தார். என்னை மிரட்டி வெள்ளைத்தாளில் கையொப்பம் வாங்கி கொண்டார்.
மேலும் கூலிப்படையை கொண்டு என்னையும் எனது குழந்தைகளையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வருகிறார். ஆகையால் இது குறித்து முழு விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும். அதோடு அவர் எடுத்த ஆபாச படங்களை அழிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்