search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செங்கோட்டையன்
    X
    அமைச்சர் செங்கோட்டையன்

    சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியே தொடரும்- அமைச்சர் செங்கோட்டையன்

    2021 சட்டமன்ற தேர்தலிலும் இந்த ஆட்சியே தொடரும். இதில் எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    கோபி:

    கோபி அடுத்த லக்கம்பட்டி பேரூராட்சியில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் சாலை, கழிவு நீர், குடிநீர் வசதி உள்பட பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது. இதனை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இதுவரை கோபி சட்டமன்ற தொகுதியில் ரூ.62 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து உள்ளது. மேலும் கோபி நகராட்சியில் ரூ. 53 கோடி செலவில் குடிநீர் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இதன் மூலம் 25 ஆண்டுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறையே இருக்காது. மேலும் கோபி தினசரி மார்க்கெட் ரூ.10 கோடி செலவில் சீரமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் காய்கறி வாங்க பொதுமக்கள் வந்தால் மழையில் நனையாமல் இருக்கும் வகையில் வசதி செய்து தரப்படும்.

    கீரிப்பள்ளம் ஓடையை கான்கிரீட் தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு வரும் தண்ணீரை மறு சுழற்சி மூலம் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும்.

    தமிழகம் சட்டம்- ஒழுங்கில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது. முதல்வர் செய்த வரும் திட்டங்களை மோடி தலைமையிலான மத்திய அரசு பாராட்டி வருகிறது. அது அம்மா கண்ட கனவு நிரூபிக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு சமீபத்தில் நடந்த 2 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அதே போல் 2021 சட்டமன்ற தேர்தலிலும் இந்த ஆட்சியே தொடரும். இதில் எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை.

    மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபடும் மாணவர்களுக்கு பிரேயர் முடிந்த பிறகு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த அரசு மாணவர்களின் எதிர் காலத்தை மனதில் கொண்டு கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

    ரூ.128 கோடி செலவில் சி.எஸ்.ஆர். நிதி மூலம் பள்ளிகளில் வர்ணம் பூசுதல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    மேலும் அமைச்சர் கூறும்போது, கோபி பகுதியில் விவசாய பயிர்களை பூச்சிகளின் தாக்குதல் குறித்து ஆய்வு குழு வரையறுக்கப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    பாரதிய ஜனதா மாநில துணை தலைவர் அரசகுமார் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவார் என்று கூறியுள்ளாரே...? என்று கேட்டதற்கு ஒவ்வொருவருக்கும் கருத்துகள் கூற உரிமை உள்ளது என்றார்.

    Next Story
    ×