search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஊட்டியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 வாலிபர்கள் போக்சோவில் கைது

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

    ஊட்டி:

    ஊட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (23). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். எமரால்டு பகுதியை சேர்ந்த பிரகாஷ் (30). கூலித் தொழிலாளி. இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

    இது குறித்து அச்சிறுமியின் பெற்றோர் ஊட்டி ரூரல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் செல்வராணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அப்போது மணிகண்டன், பிரகாஷ் ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×