என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான 2 பேர் * * * கொலையுண்ட மூதாட்டி ராஜம்மாள்
    X
    கைதான 2 பேர் * * * கொலையுண்ட மூதாட்டி ராஜம்மாள்

    ஆம்பூர் அருகே மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளை - கொள்ளு பேரன் உள்பட 2 பேர் கைது

    ஆம்பூர் அருகே மூதாட்டியை கொன்று நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தத சம்பவம் குறித்து கொள்ளு பேரன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மனைவி ராஜம்மாள் (வயது 75). இவர்களுக்கு முருகன் என்ற மகனும் ஜெயலட்சுமி, சாந்தி என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் ஜெயலட்சுமியின் மகள் இந்திராவின் மகன் மோனிஷ் பெங்களூரில் வேலை பார்த்து வந்தார்.

    அர்ஜூனன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் ராஜம்மாள் தனியாக வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் ராஜம்மாள் இன்று காலை தலை மற்றும் வாயில் ரத்தம் கசிந்தபடி வீட்டில் இறந்து கிடந்தார்.

    இதனை கண்ட அவரது உறவினர்கள் ராஜம்மாள் கீழே விழுந்து விட்டதாக கருதினர். அவரது இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது வீட்டில் இருந்து சத்தம் கேட்டது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டிற்குள் சென்றனர். அப்போது அங்குள்ள பரண்அறையில் ராஜம்மாளின் கொள்ளு பேரன் மோனிஷ் (வயது 21) மற்றும் பெங்களூரை சேர்ந்த பிரஸ்வால் (20), வினய் ஆகிய 2 பேர் இருந்தனர். அவர்களிடம் கத்தி மற்றும் மயக்க ஸ்பிரே இருந்தது.

    இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் 3 பேரையும் பிடிக்க முயன்றனர். இதில் வினய் தப்பி ஓடிவிட்டார். 2 பேரை பிடித்து ஆம்பூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மூதாட்டியை 3 பேரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. மோனிஷ் பெங்களூர் தேசிநகரில் வேலை செய்து வந்தார். அப்போது பிரஸ்வால், வினய் ஆகிய 2 பேரும் அவருக்கு நண்பராகினர்.

    3 பேரும் நேற்று கொல்லமங்கலம் வந்தனர். இரவில் அவர்கள் ராஜம்மாளிடம் சென்று நகை, பணம் கேட்டனர். ராஜம்மாள் நகை, பணம் தர மறுத்தார். இதனால் அவரது முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து ராஜம்மாள் பெட்டியில் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் 3½ பவுன் நகையை திருடினர்.

    ஆம்பூர் டி.எஸ்.பி சச்சிதானந்தம் மற்றும் போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய வினய்யை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×