என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியை திணிக்கவே புதிய கல்வி கொள்கையை கொண்டு வருகிறார்கள்- நாராயணசாமி குற்றச்சாட்டு
Byமாலை மலர்24 Aug 2019 4:20 AM GMT (Updated: 24 Aug 2019 4:20 AM GMT)
மத்தியில் ஆளுகிறவர்கள் இந்தியை திணிக்கவே புதிய கல்வி கொள்கையை கொண்டு வருகிறார்கள் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
திருச்சி:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘கல்வி உரிமை மாநாடு’ திருச்சியில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
மத்தியில் ஆளுகிறவர்கள் இந்தியை திணிக்க பார்க்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்காவிட்டால் தமிழ்மொழியை மட்டுமல்ல, தமிழகத்தையே விழுங்கி விடுவார்கள். இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பதற்காகவே புதிய கல்விக்கொள்கையை கொண்டு வருகிறார்கள். நீட் தேர்வினால் மருத்துவக்கல்வி படிக்க முடியாமல் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். தற்போது மருத்துவம் படித்து முடித்ததும் மீண்டும் ஒரு தேர்வு எழுதவேண்டும் என்கிறார்கள். அடுத்ததாக பொறியியல் படிப்பதற்கும் ஒரு தேர்வு எழுத வேண்டும் என கொண்டு வர உள்ளனர்.
புதிய கல்வி கொள்கையை எதிர்க்காவிட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும். கல்வியானது மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. தற்போது அதனை மத்திய பட்டியலுக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்பதில் புதுச்சேரி மாநிலம் உறுதியாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘கல்வி உரிமை மாநாடு’ திருச்சியில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
மத்தியில் ஆளுகிறவர்கள் இந்தியை திணிக்க பார்க்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்காவிட்டால் தமிழ்மொழியை மட்டுமல்ல, தமிழகத்தையே விழுங்கி விடுவார்கள். இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பதற்காகவே புதிய கல்விக்கொள்கையை கொண்டு வருகிறார்கள். நீட் தேர்வினால் மருத்துவக்கல்வி படிக்க முடியாமல் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். தற்போது மருத்துவம் படித்து முடித்ததும் மீண்டும் ஒரு தேர்வு எழுதவேண்டும் என்கிறார்கள். அடுத்ததாக பொறியியல் படிப்பதற்கும் ஒரு தேர்வு எழுத வேண்டும் என கொண்டு வர உள்ளனர்.
புதிய கல்வி கொள்கையை எதிர்க்காவிட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும். கல்வியானது மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. தற்போது அதனை மத்திய பட்டியலுக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்பதில் புதுச்சேரி மாநிலம் உறுதியாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X