search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலினால் ஒருபோதும் முதல்வராக முடியாது- ராஜேந்திரபாலாஜி பேச்சு
    X

    மு.க.ஸ்டாலினால் ஒருபோதும் முதல்வராக முடியாது- ராஜேந்திரபாலாஜி பேச்சு

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் ஒருபோதும் முதல்வராக முடியாது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளார்.

    ஒட்டப்பிடாரம்:

    ஒட்டப்பிடாரம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ. மோகனை ஆதரித்து அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கடந்த 18 நாட்களாக ஒட்டப்பிடாரம் தொகுதியில் தங்கி தேர்தல் பணியாற்றி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றார்.

    ஒட்டப்பிடாரம் தொகுதியில் வி.வெங்கடாசலபுரம், வாலசமுத்திரம் உட்பட 32 கிராமங்களில் மோகனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

    அவர்கள் சாலையோர டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தனர். அப்போது பெண்கள் திரண்டு வந்து வரவேற்றனர். அங்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசும்போது, தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் நல்லாட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகின்றனர்.

    எடப்பாடியார் அரசிற்கு வலு சேர்க்கும் விதமாக கிராம மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். தி.மு.க. வேட்பாளருக்கு நீங்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். தி.மு.க. மக்கள் விரோத கட்சி. மு.க.ஸ்டாலினால் ஒருபோதும் முதல்-அமைச்சராக முடியாது.

    அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தர்ராஜ் ரூ.22 கோடியை வாங்கிக்கொண்டு ஓடி விட்டார். உங்களுக்கு துரோகம் செய்த அவருக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

    எடப்பாடியார் அரசுக்கு வலு சேர்க்கும் விதமாக கிராம மக்கள் இரட்டை இலை சின்னத்திற்குவாக்களிக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×