search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தலுக்காக மட்டும் வரும் நடிகர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள்- செல்லூர் ராஜூ பேட்டி
    X

    தேர்தலுக்காக மட்டும் வரும் நடிகர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள்- செல்லூர் ராஜூ பேட்டி

    தேர்தலுக்காக மட்டும் வரும் நடிகர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #ministersellurraju

    மதுரை:

    மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வரம்பு மீறி பேசி வருகிறார். அரசியல் நாகரீகம் இல்லாத தலைவராக ஸ்டாலின் இருக்கிறார்.

    தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன? இருளில் மூழ்க வைத்த தி.மு.க. எந்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கிறது? சாதனைகள் எதையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. இதனால் தனி நபர் விமர்சனம் செய்கிறார்கள்.

    நடிகர்கள் தேர்தலுக்கு மட்டுமே வந்து முதல்- அமைச்சராகி விடலாம் என்று நினைக்கிறார்கள். அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் என்பதால் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம். இந்த தேர்தலில் மோடி தான் கதாநாயகன். எனவே மீண்டும் மோடி பிரதமராக வருவார். அ.தி. மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ministersellurraju

    Next Story
    ×