என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்தை சீண்டினால் பிரச்சனைதான் வரும்- விஜயபிரபாகரன்
    X

    விஜயகாந்தை சீண்டினால் பிரச்சனைதான் வரும்- விஜயபிரபாகரன்

    விஜயகாந்தை சீண்டினால் உங்களுக்கு தான் பிரச்சனை வரும் என்று திருச்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விஜயபிரபாகரன் தெரிவித்தார். #LoksabhaElections2019 #DMDK #Vijayakanth #VijayaPrabhakaran
    திருச்சி:

    திருச்சியில் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து எடத்தெரு அண்ணாசிலை அருகே விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசியதாவது:-

    விஜயகாந்தை பற்றி உங்களுக்கு தெரியும். அவர் கட்சியை ராணுவ கட்டுப்பாட்டில் வைத்து இருப்பார். விஜயகாந்தை சீண்டி பார்க்காதீர்கள். அவரை சீண்டினால் உங்களுக்கு தான் பிரச்சனை வரும்.

    இப்போது துரைமுருகன் வீட்டில் மூட்டைகளில் கத்தை, கத்தையாக பணம் எடுத்து இருக்கிறார்கள். தி.மு.க.வை சேர்ந்த எத்தனை பேர் உங்கள் நிலத்தை அபகரித்து இருந்தார்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீதமுள்ள 2 ஆண்டுகளும் தொடர வேண்டும்.

    மத்தியில் மோடி ஆட்சிக்கு வர வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரு நிலையான ஆட்சி அமைந்தால் தான் மக்களுக்கு நல்லது. கடந்த முறை தமிழ்நாட்டில் மோடி அலை வீசவில்லை. ஆனால் இந்த முறை தமிழகத்தில் நிச்சயம் மோடி அலை வீசும்.

    அகில இந்திய அளவில் பா.ஜ.க. தான் வெற்றி பெறும். சென்னைக்கு பிறகு திருச்சியை மற்றொரு தலைநகரமாக கொண்டு வர இருக்கிறார்கள். எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. எதிர்க்க வேண்டிய வி‌ஷயத்தை மட்டும் தான் எதிர்க்க வேண்டும். ஆதரிக்க வேண்டியவற்றை ஆதரிக்க வேண்டும்.

    ஆகையால் சிந்தித்து செயல்படுங்கள். இது ஒரு மெகா கூட்டணி. இந்த கூட்டணியை அழிக்க நினைக்கிறவர்கள் முட்டாள். இந்த கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் புத்திசாலி. அதனால் போட்டி, பொறாமை, போலி கவுரவம் எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு எதிர்காலத்தை நினைத்து சிந்தித்து செயல்படுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #LoksabhaElections2019 #DMDK #Vijayakanth #VijayaPrabhakaran
    Next Story
    ×