search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக்கொன்ற கணவர்
    X

    மனைவியின் கள்ளக்காதலனை வெட்டிக்கொன்ற கணவர்

    மனைவியின் கள்ளக்காதலனை கணவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மணிமங்கலத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி வனிதா (25). இவர்களுக்கு 1½ வயதில் மகன் உள்ளான்.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் கணபதி (36). இவர் பாலாஜியின் உறவினர் ஆவார். இதனால் கணபதி அடிக்கடி பாலாஜி வீட்டுக்கு வந்து சென்றார்.

    அப்போது வனிதாவுக்கும், கணபதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

    இதுபற்றி அறிந்ததும் பாலாஜி மனைவியை கண்டித்தார். ஆனால் அவர் தொடர்ந்து கள்ளக்காதலனுடன் உல்லாசமாக சுற்றி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் வனிதா திடீரென மாயமானார். அவர் கள்ளக்காதலன் கணபதியுடன் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. இதனால் 1½ வயது மகனுடன் பாலாஜி தவித்தார். அவர் மனைவியை தேடி வந்தார்.

    இதற்கிடையே வனிதா தனது கள்ளக்காதலன் கணபதியுடன் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த குண்டு பெரும்பேடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருப்பது பாலாஜிக்கு தெரிந்தது. ஆத்திரம் அடைந்த அவர் அவர்களை தீர்த்து கட்ட திட்டமிட்டார்.

    இன்று அதிகாலை பாலாஜி தனது கூட்டாளிகளுடன் குண்டு பெரும்பேடில் மனைவி வனிதா கள்ளக்காதலனுடன் வசிக்கும் வீட்டுக்கு சென்றார்.

    அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கணபதியும், வனிதாவும் தப்பி ஓட முயன்றனர்.

    ஆனால் கொலைக்கும்பல் கணபதியை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனை தடுக்க முயன்ற வனிதாவுக்கும் வெட்டு விழுந்தது.

    இதில் தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த கணபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வனிதா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    உடனே கொலைக்கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய வனிதாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியான கணபதியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வனிதாவின் கணவர் பாலாஜி மற்றும் வனிதாவின் தம்பி உள்பட சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். கொலைக் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    மனைவியின் கள்ளக்காதலனை கணவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×