search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வை வீழ்த்த யாராலும் முடியாது- அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
    X

    அ.தி.மு.க.வை வீழ்த்த யாராலும் முடியாது- அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை வீழ்த்த யாராலும் முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். #ministersellurraju #admk #parliamentelection

    மதுரை:

    மதுரை மாநகர் அருள் தாஸ்புரத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் செல்லூர்ராஜூ பேசியதாவது:-

    புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த இயக்கத்தை மக்கள் போற்றும் மகத்தான இயக்கமாக வழிநடத்தி வருகிறார்கள்.

    ஏழை எளிய மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. அரசின் நலத்திட்ட உதவிகள் வீடு தேடி வரும் காலம் இது. எனவே மக்கள் இந்த அரசு மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.

    ஆனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. அரசு மீது பொய் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். இதனை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க மெகா கூட்டணியை அ.தி.மு.க. ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டணி தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை பெறும்.

    வெற்றியுடன் பிறந்த இயக்கம். இதனை வீழ்த்த யாராலும் முடியாது. தமிழக மக்களின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு பல்வேறு திட்டங்களை பெற்றுத் தந்துள்ளோம். எனவே இந்த ஆட்சிக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கோபாலகிருஷ்ணன் எம்.பி., நிர்வாகிகள் தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், சோலை ராஜா, பரவை ராஜா, சண்முகவள்ளி, கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #ministersellurraju #admk #parliamentelection

    Next Story
    ×